சேலம்: வளைவில் திரும்பும்போது தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சரக்கு வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் தின்பண்ட பொருட்கள் கடை போட்டிருந்த சிலர், சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டு தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டனர். கடைசி வளைவில் இறங்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 13 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையீல், பவானியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

varient
Night
Day