மதுரை: நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டியில் உள்ள கள்ளர் தெருவில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Night
Day