நாகை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி வலுவாக நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, கடலூர், காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Night
Day