தெற்கு அந்தமான் கடலில் நிலவிய புயல் சின்னம் இன்று வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு அந்தமான் கடலில் நிலவிய புயல் சின்னம் இன்று வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  
குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இன்று புதிதாக உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் வரும் 28-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை ஒட்டிய கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நகர்ந்து அடுத்த 24 நேரத்தில் வலுப்பெற கூடுமென வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Night
Day