தென்காசி: இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை என மக்கள் குற்றம்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அருகங்குளம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழி தொடர்பாக இரு  தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்த  யாரோனும் உயிரிழந்தால் அவர்களது சடலத்தை வயல்வெளியிலும், கரடு முரடான பாதையில் கொண்டு செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Night
Day