திருவண்ணாமலை: ஆணைய தலைவரிடம் புகார் தெரிவிக்க கூடாது என மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆணைய தலைவரிடம் எத்தகைய புகார்களையும் தெரிவிக்க கூடாது என மிரட்டி தங்களை, கூட்டத்திற்கு அழைத்து வந்ததாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும், துப்புரவு பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தூய்மை பணியாளர்களின் நலன் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேசியத் தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பங்கேற்று, துப்புரவு பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துப்புரவு பணியாளர்கள், தங்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை என குற்றம்சாட்டினர். மேலும், ஆணைய தலைவரிடம் எவ்வித புகார்களையும் தெரிவிக்க கூடாது என மிரட்டியே கூட்டத்திற்கு அழைத்து வந்ததாக வேதனை தெரிவித்தனர்.

Night
Day