தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவி ராஜினாமா - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆளுநர் என்ற வசதியான வாழ்க்கையை விட்டு வரும், தன் அன்பை  மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அவா் செய்தியாளர்களை சந்தித்தார். ராஜினாமா செய்ய அழுத்தம் எதுவுமில்லை எனவும் தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகதான் மனமுவந்து ராஜினாமா செய்து உள்ளேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவா், பிரதமர், உள்துறை அமைச்சா் ஆகியோரிடம் கூறி விட்டுதான் ராஜினாமா செய்தேன் எனவும் தனது விருப்பம் என்னவென்று அவர்களுக்கு தெரியும், அதனால் தனது விருப்பத்திற்கு தடை விதிக்கவில்லை என தெரிவித்தார். 

varient
Night
Day