திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நற்பெயருக்கு களங்கம் விளைவிற்கும் வகையில் அவதூறாகப் பேசிய திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கையில் பெண்கள் புகார் அளித்தனர்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து குடியாத்தம் குமரன் அவதூறாகப் பேசியது கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகம் முழுவதும் அஇஅதிமுக தொண்டர்கள் காவல்துறையில் புகார் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் வில்லியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளனர். குடியாத்தம் குமரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day