தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்ததோடு, 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். 19 மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

Night
Day