தமிழகம்
11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களில் 19 பேரை மட்டும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. காரைக்கால், புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 22 மீனவர்கள் விசைப்படகு மூலம் கடந்த 10ம் தேதி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு, பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம், 19 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...