தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை

எழுத்தின் அளவு: அ+ அ-

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டி அடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவுக்கும்- தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்று பெருத்த நஷ்டத்துடன் திரும்பியதாக வேதனை தெரிவித்துள்ள மீனவர்கள் தங்களுக்கு படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை சேதப்படுத்தியதுடன் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கடலில் வீசி அடித்து விரட்டியதாக கரைக்கு திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Night
Day