தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்‍கு அனுமதி மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை, ஸ்ரீசாய் விவாக மகால் என்ற உள்ளரங்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கும் புரபஷனல்ஸ் இன் பாலிடிக்ஸ் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட அவசர வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அனுமதி மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்து, புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

varient
Night
Day