தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடை வெப்பம் கொளுத்தி வருவதால், வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் தினந்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில், கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், 
வரும் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Night
Day