தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஏற்கனவே மக்களை வதைத்து வரும் நிலையில் கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 21-ம் தேதி முதல் வைகாசி 15-ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அந்தவகையில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திர கத்திரி வெயில் அடிக்கப் போகிறது. பொதுவாக ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் நடப்பாண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கத்துடன் வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சேலம், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கரூர், திருத்தணி போன்ற மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சில நேரங்களில் 110 டிகிரி வரை பதிவாகி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் மற்றும் உதகையிலும் வெயிலின் தாக்கம் இருப்பது கோடையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி