தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - உயர்நீதிமன்றம் வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடலூரில் ஜெயசூர்யா என்ற கல்லூரி மாணவர் தன்னுடன் படித்த மாற்று சமுதாய மாணவியை காதலித்து வந்த நிலையில் சாலை விபத்தில்  மரணமடைந்தார். இந்நிலையில் ஜெயசூர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி அவரது தந்தை முருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தமிழ்நாட்டில் ஆணவக்கொலை அதிகரித்து வந்தாலும்  உண்மை வெளியில் வருவதில்லை என வேதனை தெரிவித்து, மாணவர் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Night
Day