தமிழகம்
கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரிக்கவில்லை
கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாக பரவும் தகவல் தவற...
தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி பகுதியைச் சேர்ந்த மோனிகா பிலிப்பைன்சில் என்பவர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மோனிகாவிற்கு பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ள நிலையில், அதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனது தோழிகளிடமும் தெரிவித்து வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு பணிக்கு மருத்துவமனைக்கு சென்ற மோனிகா, தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக செவிலியர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாக பரவும் தகவல் தவற...
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த?...