சென்னை: வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் பற்றிய தீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த பம்மல் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் திடீரென பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பம்மல் பகுதியை சேர்ந்த சம்பந்தம் என்பவர், தனது குடும்பத்துடன் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர், வெளியே வந்து பைக்குகள் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்த பொருட்களும் எரியத் தொடங்கியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

varient
Night
Day