சென்னை : அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு போக்குவரத்துக் ‍கழக தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத்துறை 
சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து அரசு மற்றும்  போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Night
Day