சென்னை புறநகர் : ஏப்.1 முதல் 2 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையின் புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் ஆகியவற்றுக்கான கட்டணம் 5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர கட்டணம் 45 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல் ஆத்தூரில் ஒருவழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்புவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரையும், மாதத்தில் 50 முறை பயணம் செய்வதற்கான மாதாந்திர கட்டணம் 60 முதல் 190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day