செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறுஆய்வு மனு - இன்று விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்க துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்‍கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மறு ஆய்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் 
தாக்கல் செய்யப்பட்டது. 

Night
Day