செந்தில்பாலாஜிக்கு 29-வது முறையாக காவல் நீட்டிப்பு : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மார்ச்-28 வரை காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜிக்கு 29வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் -14ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமின் கேட்டு அடுத்தடுத்து மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல், காணொலி காட்சி மூலம் சென்ன மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, நீதிமன்ற காவலை மார்ச் 28ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார். 

Night
Day