செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட ஸ்ரீபெரும்புத்தூர், அம்பத்தூர், மதுரவாயல், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் கால நடைமுறைகள் மற்றும் பின்பற்றக் கூடிய நடத்தை நெறிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூறினர். மேலும் தேர்தல் பிரச்சார வாகனம், தேர்தல் பிரச்சார மேடை, பிரச்சாரம் செய்யக்கூடிய இடம் குறித்து ஆன்லைன் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உருவாகியுள்ள செயலியின் செய்முறை குறித்தும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

Night
Day