தமிழகம்
அவலாஞ்சி, தொட்டபெட்டா பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு...
தொடர் மழை காரணமாக உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சா?...
கோவை மக்களவை தொகுதியில் பெயர்நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் சுதந்திர கண்ணன் என்பவர், கோவையில் பெயர்நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோதே ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியது. வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறிய உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
தொடர் மழை காரணமாக உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சா?...
சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வி?...