காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மீன்பிடி தடைக்காலம் கடந்த வாரம் முதல் அமலுக்கு வந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடைக்காலத்தால் பைபர் படகுகளில் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்கள், சிறிய வகை மீன்களான மத்தி, சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களை பழைய மீன் பிடி ஏல கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கொடுவா 900 ரூபாய்க்கும், சங்கரா மீன் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்பிடி தடை காலத்திலும் சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Night
Day