கழக முன்னாள் நிர்வாகி மறைவு -புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான திரு. A.T.மாதவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவத்துள்ளார்.

இதுதொடர்பாக புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான திரு.A.T.மாதவன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

திரு. மாதவன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day