கழக நிர்வாகி இல்ல திருமணத்தை நடத்தி வைத்தார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல்லத் திருமண விழாவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். இதன்பின்னர் மணமக்கள் இருவரும் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆசி பெற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக நிர்வாகியுமான மொளச்சூர் இரா.பெருமாளின் மகன் பெ.அரவிந்த் மற்றும் மணமகள் கே.சர்மிளாவின் திருமணம் மொளச்சூரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் நடைபெற்றது. திருமண விழாவில் பங்கேற்பதற்காக, மொளச்சூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மேளதாளங்கள் இசைக்க, வாணவேடிக்கையுடன் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் சந்நிதியில் புரட்சித்தாய் சின்னம்மா சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டார்.

இதன்பின்னர் திருமண விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மா, தமது திருக்கரங்களால் திருமாங்கல்யத்தை தொட்டு ஆசிர்வதித்து வழங்க, மணமக்கள் அரவிந்த்-சர்மிளா திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து, புரட்சித்தாய் சின்னம்மாவிடம் மணமக்கள் ஆசி பெற்றனர். பின்னர், மணமக்கள் இருவரும் குடும்பத்தினருடன் இணைந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திருமண விழாவில் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Night
Day