கள்ளக்குறிச்சி: 264 அடுக்குமாடி குடியிருப்புகளில் 22 பேருக்கு மட்டும் வீட்டுக்கான ஆணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட்ட 264 அடுக்குமாடி குடியிருப்புகளில், 22 பேருக்கு மட்டுமே வீட்டுக்கான ஆணையை, திமுக எம்.எல்.ஏ. வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், 2 ஆயிரத்து 466 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 264 குடியிருப்புகளுக்கு விண்ணப்பத்தவர்களில் 39 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானதாக அதிகாரிகள் தேர்வு செய்து, அதில் 22 பேருக்கு மட்டுமே குடியிருப்பிற்கான ஆணையை திமுக எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் வழங்கினார். இதனையறிந்த விண்ணப்பதாரா்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

varient
Night
Day