கள்ளக்குறிச்சி: சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதிய பேருந்து - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சந்தைமேடு பகுதியை சேர்ந்த சேட்டு என்பவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற அவர் மீது  தனியார் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த சேட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day