எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரள கடலில் மூழ்கிய லைபீரியா சரக்கு கப்பலில் இருந்து கண்டெய்னர் ஒன்று கன்னியாகுமரி கடற்கரையில் கரை ஒதுங்கியது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, இந்த கண்டெய்னரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சி அரபி கடலில் பகுதியில் கடந்த 24 தேதி லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் மிதந்தந்து ஆங்காங்கே கரை ஒதுங்கி வருகின்றன. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் வாணியகுடி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னரின் கழுகுப் பார்வை காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
கரை ஒதுங்கிய கண்டெய்னரில் இருந்து மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் ஹெலன்நகர் கடலோர பகுதியில் கரை ஒதுங்கியதால் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடற்கரையில் ஒதுங்கிய மூலப் பொருட்களை யாரும் தொட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்ரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து கண்டெய்னரை பொக்லைன் மூலம் கரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கம்பி அறுந்ததன் மூலம் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததாலும், கடலில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.