கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளச்சல், சின்னமுட்டம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதையடுத்து சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 350 விசை படகுகள் கரை ஒதுக்கப்பட்டுள்ளன. 

Night
Day