கடந்தாண்டு நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு - 14 மாணவர்கள் சேர்க்‍கை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளது. மருத்துவ மாணவர்கள் 26 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த முறைகேடு, கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விசாரணையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட 42 தேர்வர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வர்கள் அடுத்த ஆண்டு வரை நீட் தேர்வு எழுத இயலாது. மேலும் 215 மாணவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Night
Day