தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சியரிடம் மனைவி புகார் மனு அளித்துள்ளார். கோபி செட்டிபாளையம் வாய்கால் சாலையை சேர்ந்த பூபாலன் தனியார் உணவகத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுவுக்கு அடிமையான அவர் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் பூபாலன் உயிரிழந்துவிட்டதாக மறுவாழ்வு மையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை என பூபாலனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். எனவே மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...