ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. அவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்து அறிவிக்கும். அதன்பின் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெறும். வரும் 19-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்கின்றனர். தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விளம்பர திமுக அரசுக்கு எதிரான காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day