ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 87 ஆயிரத்து 600ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 560 குறைந்த நிலையில், பிற்பகல் மீண்டும் 560 ரூபாய் உயர்ந்து சவரன் 87 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

காலையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்தது. இதன்மூலம் வெள்ளி கிராம் 3 ரூபாய் உயர்ந்து 164 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day