ஆனைமலை அருகே 8 ஊராட்சிகளுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

​​கோவை மாவட்டம் ஆனைமலை அருகே 8 ஊராட்சிகளுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய் உடைந்து அதிக அளவு தண்ணீர் சாலையில் வீணானது. ஆனைமலையை அடுத்த கம்பாலபட்டி, ஜல்லிபட்டி, கோட்டூர்  உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில்  பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஆழியாரில் இருந்து குழாய் வழியாக நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில்  ஆலாங்கண்டி பகுதியில் நேற்று மாலை 5.30 மணி அளவில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதிக அழுத்தத்துடன் சுமார் 30 அடிக்கு மேல் தண்ணீர் பீறிட்டது. இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து பிரதான குழாயில்  ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். எனினும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அதிக அளவில் குடிநீர் சாலைகளில் வீணானது.

Night
Day