அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஏப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுப்பில் உள்ளதால் வழக்கு விசாரணையை பொறுப்பு நீதிபதி சுவாமிநாதன் ஏப்ரல் 5-ஆம் தேதிக்கிகு ஒத்தி வைத்தார். வழக்கு விசாரணைக்கு திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறை தரப்பினர் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day