நடிகை அருந்ததி நாயருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை : மருத்துவ செலவிற்கு உதவிட குடும்பத்தினர் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை அருந்ததி நாயருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விஜய் ஆண்டனியின் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அருந்ததி நாயர். இவர், கடந்த மாதம் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருந்ததி நாயரின் மருத்துவ சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகி வரும் நிலையில், திரையுலகினர் மருத்துவ செலவிற்கு உதவிட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day