ஒரே நாளில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ஐந்து இடங்களில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் அரங்கேறிய கொடூரம்  நிகழ்ந்துள்ளது.

விளம்பர திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த குற்றங்களை தடுக்க விளம்பர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படாத நாளே இல்லை என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு சான்றாக நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 

சென்னை கொருக்குப்பேட்டையில் மதுபோதையில் 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரண்டு மாணவிகளை கடத்தி சென்று பாலியல் தொல்லையளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 12ம் வகுப்பு மாணவிக்கும் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. மயிலாடுதுறையில் பள்ளி வேனில் சென்ற 11ம் வகுப்பு மாணவிக்கு வேன் ஓட்டுநரால் பாலியல் தொல்லையளிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறாக நாளுக்கு நாள் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் இவற்றை தடுக்க வேண்டிய அரசோ விளம்பரத்திற்காக நிகழ்ச்சிகளை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். 

Night
Day