ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளையடித்த வடமாநில கும்பல் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி 29 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர். 


கடந்த 2ம் தேதி ரங்காரெட்டியில் செயல்படும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் சேதப்படுத்தி அதில் இருந்த ரொக்கத்தை 10 பேர் கொண்ட கொள்ளைடித்து சென்றனது. இது குறித்து தனிப்படை அமைத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், அப்பகுதியில் ஜேசிபி மெக்கானிக்காக பணிபுரியும் ராஜஸ்தானை சேர்ந்த ராகுல் என்பவர் மூலம் கொள்ளை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. இதையடுத்து ராகுலை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரின் கூட்டாளிகள் 5 பேரையும் கைது செய்தனர்.

Night
Day