உத்தரபிரதேசம்: தெருநாய்களுடன் பிட்புல் நாயை சண்டையிட வைத்த மூவர் மீது வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தர பிரதேசம் அருகே பலவீனமான தெரு நாய்களோடு தனது பிட்புல் நாயை சண்டையிட வைத்து வீடியோ எடுத்து வெளியிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காசியாபாத்தில் உள்ள வினோத் பைஸ்லா, ரிங்கி பைஸ்லா மற்றும் அவிஷ் ஆகிய 3 பேர் தனது பிட்புல் நாயை தெருநாய்களோடு சண்டையிட வைத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுதொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து, அந்த 3 இளைஞர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Night
Day