அஜித்குமார் கொலை வழக்கு: கைதான காவலர்களின் செல்போன்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் கைதான காவலர்கள் 5 பேரின் செல்போனை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் தாக்கி உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையம் வந்த சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் வலிப்பு வந்து இறந்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவலர் ரமேஷ்குமாரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். 

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 காவலர்களையும் சிபிஐ விசாரித்ததுடன், ஏடிஎஸ்பி சுகுமாரிடம் 2 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தி உள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல்நிலையத்தில் அஜித் குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கோப்புகள், காவல் நிலைய சிசிடி காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் காவலர் ஆனந்த், அஜித்குமாரை அடித்து சித்திரவதை செய்தது வீடியோவில் பதிவாகியுள்ளதால், சிபிஐ அதிகாரிகள் அவருடைய வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே கைதான காவலர்கள் 5 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதனை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Night
Day