வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் உறுதியளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்சை, யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி தெரிவித்தார். இளைஞர், யுவதிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றுக்கொடுக்கவும், தீவுகளுக்கான படகு சேவையை விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

varient
Night
Day