ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ள ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

துருக்கியில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்யா - உக்ரைன் அடையே போர் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கர வான்வழி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து மோரிஸ்டவுன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அதிபர் புதினின் செயல் தமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும், அவருக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார். ராக்கெட்டுகளை ஏவி அவர் மக்களைக் கொல்வது தமக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்த டிரம்ப், உக்ரைனுக்கு எதிரான சமீபத்திய தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யா மீதான தடைகளை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறினார். 

Night
Day