பிரேசில்: விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசில் அருகே விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயரிழந்தனர். தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் கருகி 10 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day