தென் கொரியாவின் இசை வீடியோவை பார்த்தவர்களுக்‍கு சிறைத்தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

K-pop எனப்படும் தென் கொரியாவின் இசை வீடியோவை பார்த்த இரு வடகொரிய இளைஞர்களுக்கு 12ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா - தென்கொரியா இடையே நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்தநிலையில் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள தென்கொரியாவின் K Pop இசை வீடியோக்களை இரு வடகொரிய இளைஞர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இது வடகொரிய அரசுக்கு தெரியவர இரு இளைஞர்களுக்கும் 12ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதே கே பாப் நிகழ்ச்சிக்கு அடிமையாகித்தான் தான், கரூர் மாணவிகள் மூவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Night
Day