சீனாவில் பள்ளி விடுதி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். யான்ஷான்பு பகுதியில் செயல்பட்டு வரும் இங்காய் என்ற பள்ளி விடுதியில் நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day