சூரிய கிரகணம் - சந்திரனின் நிழலை ஆராய நாசா திட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி வானில் நிகழும் முழு சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழலை ஆராய 3 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நாஸா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி வானில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே செல்லும் சந்திரனின் நிழல் சூரியனை மறைக்‍கும் போது தலா 45 நிமிட இடைவெளியில் 3 ராக்‍கெட்களை விண்ணில் செலுத்த நாஸா திட்ட​மிட்டுள்ளது. இந்த ராக்‍கெட்கள் 400 கிலோ மீட்டர் உயரத்தில் செல்லும் போது ஒலி எழுப்பும். இந்த ஒலியால் சந்திரனின் நிழல் விழும் பகுதியில் ஏற்படும் மாறுபாடுகள், காற்று அழுத்த வேறுபாடுகள், பூமியின் வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.  

Night
Day