ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது இஸ்ரேலின் உயிர்வாழ்விற்கான ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை என கூறியுள்ளார். இந்த அச்சுறுத்தலை நீக்க ஈரான் மீது எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தாக்குதல் தொடரும்" என்று பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈராக்கில் விமான நிலையங்கள் மூடப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே ஈரான் மீதான தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் பல மாதங்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருவதற்கு மத்தியில் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Night
Day