அமெரிக்கா : சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பரோவில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 6 பேர் சுடப்பட்ட நிலையில், 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது வரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day