பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய நடவடிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியைக் கொல்ல  திட்டமிட்டுள்ளதாக மும்பை காவல்துறையின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


அழைப்பு விடுத்தவர் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மும்பையின் அம்போலி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,  அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதாகவும் ஆனாலும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதமும், இதேபோல் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day